Monday, May 10, 2010

இலங்கையில் மீண்டும் இந்து சமய பாதயாத்திரை ஆரம்பம் !

இலங்கையில்  மீண்டும்  இந்து சமய பாதயாத்திரை ஆரம்பம் !

இலங்கையில் எமது பள்ளி பராயங்களில் பாதயாத்திரை செல்வதை கேள்விப்பட்டோம் --

சமயம் சம்பந்தப்பட்ட யாத்திரைகளே அவை --

வடக்கு கிழக்கு மாகாணங்களில்  இருந்து தெற்கில் உள்ள கந்தன் வள்ளியை கவர்ந்த கதிர்காமம்  செல்வதே முக்கியமானது --

கந்தனை புகழ்ந்து கோஷமெழுப்பும் பாதயாத்திரை தமிழ் பக்தர்களுடன்
சிங்கள பக்தர்களும் இடையிடையே இணைந்து கொள்வதும் வழைமையாம் ! --

சுதந்திரம் கிடைத்த ஓரிரு வருடங்களில் தமிழ் -- சிங்கள மக்களிடையே அரசியல்வாதிகள்
துவேஷத்தை வளர்த்தனர் --

சிங்கள மக்கள் 85 வீதமெள்றாலும்
படிப்பறிவு கூடிய 12 வீத தமிழர்களது திறமையை கண்டு அஞ்சி, ஏங்கி, வஞ்சித்தது உண்மை தான் -- சொந்த அனுபவம் --

சமய பாதயாத்திரை நீக்கப்பட்டு அரசியல் பாதயாத்திரை தொடங்கியது --

கட்சிகளுக்கும் இனங்களுக்கும் எதிராக பாதயாத்திரை நடாத்தி
பொதுமக்களை மட்டுமே பலி கொடுத்தனர் --

இரு இனங்களது அரசியல்வாதிகளும் தப்பித்துக் கொண்டனர் --

அமிர்தலிங்கத்தினது பிடிபட்ட மகன் ஐே ஆர் ஐயவர்தன அவர்களால் விடுவிக்கப்பட்டார் --

நாடறிந்த உண்மை --

இன்று மீண்டும் சமய பாதயாத்திரை
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து தெற்கு நோக்கி ஆரம்பமாகின்றதாமே ! --

இதனை இலங்கை வானொலி தந்தாலும் -- சிங்கள அரசாங்க வானொலி தானே என நம்பாத மக்கள் இருக்கத்தான் செய்வார்கள் --

அவர்கள், அரசியல்வாதி கெடுதியை போதித்தால் அவற்றை மட்டும் திடமாக நம்புவார்கள் --

பகுத்து அறிய இயலாத ஐடம் தான் அய்யா நம் சுயநல மக்கள் --

ஓர் தலைவர் கூறியது போன்று --

'' மக்கள் ஓரு மந்தைக் கூட்டமடா !!! ''

Posted via email from What's New in Internet Today !

1 comment:

deen said...

It is a good news. May humanity shines in Sri Lanka